ஆப்நகரம்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சசிகலா கணவர் நடராஜன்!!

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை தேறியுள்ள நிலையில் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TOI Contributor 2 Nov 2017, 6:02 pm
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை தேறியுள்ள நிலையில் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil sasikala husband natarajan returned home after one month treatment
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சசிகலா கணவர் நடராஜன்!!


சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் உள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கல்லீரல், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சுவாச கோளாறு காரணமாக ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் மற்றும் இதர தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த அக்டோபர் 4ம் தேதி மூளைச்சாவு அடைந்த தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நடராஜனுக்கு பொருத்தப்பட்டது. இவரைப் பார்ப்பதற்கு சசிகலாவும் 5 நாட்கள் பரோலில் வந்து இருந்தார். இந்நிலையில் வழக்கமான வெள்ளை ஜிப்பாவில் நடராஜன் தோற்றமளிக்க்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவருக்கு அருகில் 2 மருத்துவர்களும் நிற்கின்றனர்.

இதனிடையே உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்த நடராஜன் வீடு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி