ஆப்நகரம்

சசிகலா ஜெயில் அறைக்கு அருகே கொலையாளி ‘சயனைடு’ மல்லிகா

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

TNN 16 Feb 2017, 5:47 pm
பெங்களூரு : சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
Samayam Tamil sasikala in bangalore jail
சசிகலா ஜெயில் அறைக்கு அருகே கொலையாளி ‘சயனைடு’ மல்லிகா


பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் ஆஜராஜ சசிகலா அன் கோ, மருத்துவ சோதனைக்கு பின், நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவின் சிறை அறை 10*12 அடி கொண்டதாக உள்ளது. அதில் கழிவறை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. சசிகலா தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயில் அறையின் அருகே ‘சையனைடு’ மல்லிகா என்ற கொலைக்குற்றவாளி அடைக்கப்பட்டுள்ளார்.



‘சையனைடு’ மல்லிகா கர்நாடகாவில் பெரிய பெண் கிரிமினல்களில் முக்கியமானவர். கொலை வழக்கில் தண்டனைப் பெற்று வரும் ’ ‘சையனைடு’ மல்லிகா கடந்த முறை ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்றிருந்த பொழுது கூட அங்கே தான் இருந்தார்.

அப்போது ஜெயலலிதாவை சந்தித்து பேச அனுமதிகேட்டார். இருப்பினும் அவருக்கு சிறைத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. தற்போது சசிகலா சிறை அருகே மல்லிகாவில் அறை அமைந்துள்ளது.

அடுத்த செய்தி