ஆப்நகரம்

களத்தில் இறங்கிய சசிகலா: இனிமேல் இப்படி தான்!

சசிகலா சென்னை சைதாப்பேட்டையில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

Samayam Tamil 12 Nov 2021, 4:05 pm
நான்கு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர் சென்னை திரும்பிய சசிகலா தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதன் பின்னர் ஆடியோக்கள் வெளியிட்டு ஆழம் பார்த்த அவர் தற்போது முழு வீச்சில் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
Samayam Tamil sasikala


ஜெயலலிதா நினைவிடம், எம்ஜிஆர் இல்லம் ஆகியவற்றுக்கு சென்று சுற்றுப் பயணத்தை தொடங்கிய அவர் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு பயணம் மேற்கொண்டு தனக்கு தொண்டர் படை ஆதரவு உள்ளது என காட்டினார்.

அதிமுக பொதுச்செயலாளர் என திமுக அரசை விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்த சசிகலா இன்று களத்தில் இறங்கியுள்ளார்.
மின் கட்டணம் செலுத்த அவகாசம்: அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்!
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வந்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு மையப் பகுதிகளில் நீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை நோக்கி வரும் புதிய புயல் சின்னம்?
முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக களத்தில் இறங்கி மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் அடித்த அந்தர் பல்டி: நம்பலாமா, நம்பக் கூடாதா? குழப்பத்தில் சசிகலா
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என உரிமை கோரும் சசிகலா இன்று தியாகராய நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

களத்தில் இறங்கினால் மட்டுமே அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் அடுத்தகட்டத்துக்கு செல்ல முடியும் என அரசியல் விமர்சகர்கள் ஏற்கெனவே கூறிவந்த நிலையில் சசிகலா இன்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்த செய்தி