ஆப்நகரம்

இரட்டை இலை பறிபோனதற்கு சசிகலா தான் காரணமா?

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தான் இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கு முக்கிய காரணமாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 23 Mar 2017, 12:37 pm
சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தான் இரட்டை இலை சின்னம் பறிபோனதற்கு முக்கிய காரணமாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sasikala is the only reason for admk symbol freeze
இரட்டை இலை பறிபோனதற்கு சசிகலா தான் காரணமா?


ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் சசிகலா பொதுச்செயலாளராக வருவதற்கு அவர் செய்த வேலைகள் மக்களை முகம் சுழிக்க வைத்தது. கட்சியில் இணைந்து 5 ஆண்டுகள் ஆகாத நிலையில், பொதுச்செயலாளராக ஒருவரை தேர்வு செய்ய முடியாத நிலை இருக்கும் பட்சத்தில், அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து தான் கட்சியின் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்ற அதிமுகவின் விதிகள் எங்கே போனது?

இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்தனர். மேலும், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது நியாயமாக நடக்கவில்லை என்றும் தங்களிடமுள்ள ஆதாரங்களையும் அடுக்கியது. ஓபிஎஸ்ஸின் இந்த ஆதாரங்களும், சசிகலாவின் ஆசையும் தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு காரணமாக இருந்தது என்று தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

sasikala is the only reason for admk symbol freeze?

அடுத்த செய்தி