ஆப்நகரம்

அ.தி.மு.க.வின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலா தான் காரணம் – திவாகரன்

அ.தி.மு.க.வில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பெங்களூரு சிலையில் உள்ள சசிகலா தான் காரணம் என்று அவரது சகோதரா் திவாகரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 29 Oct 2018, 4:04 am
அ.தி.மு.க.வில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாவின் தவறான முடிவுகள் தான் காரணம் என்று அவரது சகோதரா் திவாகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Divakaran Sasikala


மதுரையில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் சசிகலாவின் சகோதரா் திவாகரன் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், அ.தி.மு.க.வில் நடைபெறக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தான் காரணம். அவா் எடுத்த தவறான காரணம் தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது.

டிடிவி தினகரனை துணைப்பொதுச் செயலாளராக நியமித்தது தான் சசிகலா செய்த மிகப்பெரிய தவறு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்களை அ.தி.மு.க. திரும்ப அழைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிது. ஆனால், அவா்களை யாரோ தடுத்து நிறுத்துகின்றனா்.

டிடிவி தினகரனை பொறுத்தளவில் அ.தி.மு.க.வுடன் சண்டை போடுவதும், அந்த இயக்கத்தை கைப்பற்ற நினைப்பதும் தான் அவரது குறிக்கோளாக உள்ளது. எங்கள் இயக்கத்தில் இருவர் இருந்தால் கூடபோதும். அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றார் திவாகரன்.

அடுத்த செய்தி