ஆப்நகரம்

சிறையில் கம்ப்யூட்டர், கன்னடம் கற்கும் சசிகலா

பெங்களூரு சிறையில் சசிகலா கம்ப்யூட்டர் மற்றும் கன்னடம் கற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 13 Mar 2018, 12:26 pm
பெங்களூரு சிறையில் சசிகலா கம்ப்யூட்டர் மற்றும் கன்னடம் கற்றுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sasikala learns kannada in bengaluru jail
சிறையில் கம்ப்யூட்டர், கன்னடம் கற்கும் சசிகலா


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவருக்கு சிறையில் சொகுசு வசதிகள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்று தேவையான வசதிகளைச் செய்து தந்தார் என்று முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கூறினார். இதனையடுத்து சத்திய நாராயணராவ் மீது ஊழல் தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறை சீருடைக்குப் பதில் சாதாரண உடையில் திரிவதைப் பார்த்து சிறை அதிகாரியைக் கண்டித்துள்ளார். சிறை விதிமுறைக்கு உட்பட்டே அவர்களுக்கு சாதாரண ஆடை அணிய அனுமதி வழங்கப்பட்டது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, ரேகா சர்மா சிறையில் ஆய்வு நடத்திய போது எடுக்கப்பட்ட படம் வெளியாகியுள்ளது. அதில், சசிகலா சீருடை அணியாமல் இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஆய்வின் போது, சசிகலா வைத்திருந்த வளையல்களைப் பார்த்து ஆசைப்பட்டு அவற்றை ரேகா சர்மா வாங்கிக்கொண்டார் என்றும் அதற்கான விலையை ரேகா கொடுத்த போது சசிகலா ‘இது என் பரிசு’ என்று கூறி பணம் வாங்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


இதனிடையே, சசிகலா சிறையில் கம்ப்யூட்டர் மற்றும் கன்னடம் கற்றுக்கொள்கிறார் என்றும் இளவரசி நன்கு கன்னடம் பேச கற்றுக்கொண்டுவிட்டார் என்றும் சுதாகரன் வேலை செய்யாமல் ஜாலியாக நேரம் போக்குவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி