ஆப்நகரம்

உடம்பு சரியில்லை: எஸ்கேப் ஆக சசிகலா திட்டம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா உடல்நலம் சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 14 Feb 2017, 12:35 pm
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா உடல்நலம் சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sasikala likely to escape by going hospital
உடம்பு சரியில்லை: எஸ்கேப் ஆக சசிகலா திட்டம்?


வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைச் சேர்த்ததாக ஜெயலலிதா, வி.கே.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வர் மீது 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் முதலில் வழக்குத் தொடரப்பட்டது.

20 ஆண்டுகள் தொடர்ந்து பல திருப்பங்களைக் கடந்து நீடித்த இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது. அதன்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டது. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் படி, வி.கே.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வி.கே.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் உடல்நலம் சரியில்லை என்று கூறி மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலுக்குப் போவதற்குப் பயந்து எந்த எஸ்கேப் ஐடியாவை பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலி என்று கூறி சசிகலா எப்போது வேண்டுமானாலும் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று பேசப்படுகிறது.

அடுத்த செய்தி