ஆப்நகரம்

ரூ.2 கோடி செலவில் சசிகலாவுக்கு புதுசு புதுசா ரூம்!

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ரூ.2 கோடி செலவில் நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

TNN 18 Jul 2017, 1:54 am
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ரூ.2 கோடி செலவில் நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sasikala lives like a 5 star hotel in bangalore jail
ரூ.2 கோடி செலவில் சசிகலாவுக்கு புதுசு புதுசா ரூம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூரின் பரப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு தனது வசதிக்காக சிறையையே மாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூர் சிறையில் சிறை துறை டிஐஜி ரூபா மேற்கொண்ட ஆய்வில் சசிகலாவுக்கு ரூ.2 கோடி செலவில் சமையல் அறை, படுக்கை அறை, தனி குளியல் அறை, யோகா செய்ய தனி அறை என்று சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், அந்த சமையல் அறையில் தானே சமைத்து சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



அந்த சிறப்பு வசதிக்காக சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம் லஞ்சமாக கொடுத்தது மட்டுமல்லாமல், ஓரிரு முறை சிறையை விட்டு வெளியே சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில வசதிகளுக்காக பணத்தை அள்ளி வீசுகிறாராம். சசிகலாவுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள அறையில் பாதுகாப்புக்காக மற்ற யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தடுப்பு சுவர் வைக்கப்பட்டிருந்தது. மேலும், வெளியில் இருந்து சசிகலாவை சந்திக்க வரும் இடத்தில் கேமரா வசதியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக சசிகலா சிறையில் 5 ஸ்டார் ஹோட்டலில் உள்ள வசதிகளுடன் சொகுசாக இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி