ஆப்நகரம்

எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் தியானம் செய்த சசிகலா..!

ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் தியானத்தில் ஈடுபட்ட சசிகலா,பின்னர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

TNN 15 Feb 2017, 1:05 pm
ராமாவரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் தியானத்தில் ஈடுபட்ட சசிகலா,பின்னர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
Samayam Tamil sasikala meditete infront of mgrs portrait in ramavaram memorial house
எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் தியானம் செய்த சசிகலா..!


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்,சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா நடராஜன் உள்ளிட்ட மூவர் இன்று மாலை பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பெங்களூரு செல்வதற்காக போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்ட சசிகலா ,அங்கிருந்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றார்.அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த சசிகலா,திடீரென ஆக்ரோஷமாக சமாதி மீது கையால் அடித்து சபதம் செய்தார்.அதன் பின்னர் மனதிற்குள் ஏதோ முணுமுணுத்தார்.

அதன் பின்னர் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்திற்கு சென்ற அவர்,அங்கிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.பின்னர் அங்கிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு கீழ் அமர்ந்து இரண்டு நிமிடங்கள் தியானம் செய்தார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு,போரூர் வழியாக பெங்களூர் சாலையை அடைந்தார்.

Sasikala meditete infront of MGR's portrait in Ramavaram memorial house

அடுத்த செய்தி