ஆப்நகரம்

பிறந்தார் இரண்டாவது ஜெயலலிதா!!

பெண் குழந்தை ஒன்றுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை மீண்டும் சூட்டி அழகு பார்த்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.

TNN 8 Jan 2017, 5:25 pm
சென்னை: பெண் குழந்தை ஒன்றுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை மீண்டும் சூட்டி அழகு பார்த்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.
Samayam Tamil sasikala names an another baby as jayalalithaa
பிறந்தார் இரண்டாவது ஜெயலலிதா!!


உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியன்று காலமானார். இவர் அதிமுக-வின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். ஜெயலலிதாவின் மறைவையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.

அதேபோல், அதிமுக-வின் பொதுச் செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பொறுப்பேற்றார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜேஷ் - நந்தினி என்ற தம்பதியின் பென் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு சசிகலாவிடம் அத்தம்பதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று அக்குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டியுள்ளார் சசிகலா.

முன்னதாக, தேனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் பெண் குழந்தைக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சசிகலா சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sasikala names an another baby as Jayalalithaa

அடுத்த செய்தி