ஆப்நகரம்

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மீண்டும் உறுதி!

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சீராய்வு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

TNN 23 Aug 2017, 5:15 pm
புதுடெல்லி : சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சீராய்வு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Samayam Tamil sasikala natarajan to stay in jail as sc rejects review plea in da case
சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மீண்டும் உறுதி!


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனை பெற்று, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நிரபராதிகள், தங்களை விடுவிக்க கோரியும், தங்கள் மேல் குற்றம் இல்லை என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி பாப்டேட், அமிதவா ராய் ஆகியோர் தங்களது நீதிபதி அறையில் சீராய்வு மனு விசாரித்தனர். அதில் இவர்களின் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இவர்களுக்கு மறுசீராய்வு மனு என்ற ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அது பெரும்பாலும் சசிகலா தரப்புக்கு சாதகமாக இருக்காது என தெரிகிறது.

இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்தே ஆகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி