ஆப்நகரம்

நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்:சசிகலாவை முதல்வராக்க திட்டம்?

நாளை அதிமுக தலைமை அலுவலுகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 4 Feb 2017, 10:48 am
நாளை அதிமுக தலைமை அலுவலுகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil sasikala natarajan will be elected as a cm of tamilnadu
நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்:சசிகலாவை முதல்வராக்க திட்டம்?


தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர்,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பார் எனவும்,இதற்காக உசிலம்பட்டி அல்லது திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடலாம் எனவும் கூறப்பட்டது.ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனை உறுதி செய்யும் வகையில் அதிமுக கட்சியிலும்,அரசு வட்டாரங்களிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று அதிமுக செயலாளராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக கட்சி நிர்வாகிகளை சசிகலா மாற்றம் செய்தார்.குறிப்பாக சசிகலாவுக்கு விசுவாசமாக இருக்கக் கூடிய செங்கோட்டையன் உள்ளிட்ட சிலருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவாரக கருதப்படும்,தமிழக அரசின் தலைமை ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் திடீரென தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.சசிகலா தரப்பிலிருந்து தரப்பட்ட நெருக்கடிதான்,அவரின் ராஜினாமாவுக்கு காரணம் என கூறப்படுகிறது.இவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இத்தனை களேபரங்களுக்கு இடையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் சசிகலாவை தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏக்களிடம் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Sasikala Natarajan will be elected as a CM of Tamilnadu?

அடுத்த செய்தி