ஆப்நகரம்

ஹைதராபாத்தில் சசிகலாவிற்கு சொந்தமான சொகுசு பங்களா!?

ஹைதராபாத்தில் சசிகலாவிற்கு சொந்தமான சொகுசு பங்களா!?

TOI Contributor 16 Feb 2017, 2:48 pm
சசிகலாவுக்கு சொந்தமான, பல்வேறு வசதிகளுடன் கூடிய சொகுசு பங்களா ஒன்று ஹைதராபாத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
Samayam Tamil sasikala owns a house in hyderabad
ஹைதராபாத்தில் சசிகலாவிற்கு சொந்தமான சொகுசு பங்களா!?


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் வெளியிட்டுள்ள இவர்களின் சொத்துமதிப்பு வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், செகந்திரபாத்தில் உள்ள ராதிகா காலனியில் சசிகலாவுக்கு சொந்தமான சொகுசு பங்களா இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தனி வீடு நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. ஜெயலலிதா திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த நேரங்களில் சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் போது தங்குவதற்காக இந்த வீட்டை வாங்கியுள்ளார். ஆனால் தற்போது இந்த வீடு சசிகலா நடராஜனின் பெயரில் உள்ளது. வீட்டிற்கு முன்னால் உள்ள பெயர் பலகையிலும் சசிகலா நடராஜன் பெயர் உள்ளது.

2001 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில் ஜெயலலிதா இந்த வீட்டில் தங்கி இருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னர் ராதிகா காலனி கமிட்டியை சேர்ந்தவர்கள், உபயோகிக்காததால் வீடு பாழடைந்துவிட்டதாகவும், உடனே சரிசெய்யும்படியும் ஜெயலலிதாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் வீட்டை சரி செய்ய சுரேன் என்பவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 1.5 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வாடகை மதிப்பு 50,000 ரூபாய் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 1968ஆம் ஆண்டு ஜெயலலிதா ஜீடிமெட்லா பகுதியில் 14.50 ஏக்கர் பரப்பளவில் திராட்சை தோட்டத்தை தன் பெயரிலும், தன் அம்மாவின் பெயரிலும் வாங்கியிருக்கிறார். அதற்கு ஜெஜெ கார்டன் என்றும் பெயரிட்டுள்ளார். அதன் பின்னர் அதே பகுதியில் 3.33 நிலத்தையும் வாங்கினார். அதே போல் ஸ்ரீநகர் காலனியில் 14,000 சதுர அடியில் உள்ள வீடு ஒன்றையும் 1967ஆம் ஆண்டு ஜெயலலிதா வாங்கி இருக்கிறார். செகந்திரபாத்தில் உள்ள வீடு பெயர் மாற்றம் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு செய்யப்பட்டதா என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

அடுத்த செய்தி