ஆப்நகரம்

சசிகலா பரோலிற்கு கேட் போடும் தமிழக அரசு; பயந்து ஜகா வாங்குவதாக டிடிவி தரப்பு குற்றச்சாட்டு!

சசிகலா பரோலிற்கு தமிழக அரசு தடை போடுவதாக டிடிவி தரப்பு தங்கதமிழ்ச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 4 Oct 2017, 1:51 pm
சென்னை: சசிகலா பரோலிற்கு தமிழக அரசு தடை போடுவதாக டிடிவி தரப்பு தங்கதமிழ்ச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil sasikala parole is not cleared by tn govt
சசிகலா பரோலிற்கு கேட் போடும் தமிழக அரசு; பயந்து ஜகா வாங்குவதாக டிடிவி தரப்பு குற்றச்சாட்டு!


டிடிவி தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் 18 பேரும் ஆட்சியை கலைக்க சதி செய்வதாக சபாநாயகர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதற்கான வீடியோ ஆதாரமும் சமர்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தரப்பு முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்ச் செல்வன், ஆட்சியை கலைக்க சதி செய்ததாக எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதற்கான வீடியோ ஆதாரத்தில், எந்த இடத்திலும் ஆட்சியை கவிழ்ப்போம் என்று குறிப்பிடவில்லை. ஓபிஎஸ் தரப்பு ஆட்சிக்கு எதிராக வாக்களித்தது தான் ஜனநாயகப் படுகொலை.

சசிகலாவிற்கு பரோல் கிடைக்க, தமிழக அரசு என்.ஒ.சி கொடுக்க வேண்டும். ஆனால் அதனை தராமல் தமிழக அரசு தாமதிக்கிறது.

பயத்தின் காரணமாக அவ்வாறு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் ஓரிரு நாளில் பரோல் கிடைத்து விடும் என்று நம்பிக்கையிருப்பதாக கூறினார்.

Sasikala parole is not cleared by TN Govt.

அடுத்த செய்தி