ஆப்நகரம்

சசிகலா புஷ்பா முன்ஜாமீன் வழக்கில் 4 மணிக்கு தீர்ப்பு

சசிகலா புஷ்பா உள்பட 4 பேரின் மீதான முன்ஜாமீன் வழக்கில் பிற்பகல் 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

TNN 29 Aug 2016, 1:57 pm
மதுரை: சசிகலா புஷ்பா உள்பட 4 பேரின் மீதான முன்ஜாமீன் வழக்கில் பிற்பகல் 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil sasikala pushpa anticipatory bail plea probe on evening 4
சசிகலா புஷ்பா முன்ஜாமீன் வழக்கில் 4 மணிக்கு தீர்ப்பு


அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார். எனவே, நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்னதாக உத்தரவிட்டிருந்தது. மேலும், அன்றைய தினத்தில் ஜாமீன் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆனால், தமிழகத்தில் சென்று ஆஜராக அச்சம் இருப்பதாகவும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரனையில், சசிகலா புஷ்பா வரும் 29-ம் தேதி (இன்று) மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக வேண்டும். அதே நேரத்தில் அவரை கைது செய்வதற்கு 6 வார காலம் தடை விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, சசிகலா புஷ்பா தனது முன்ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார். இந்நிலையில், சசிகலா புஷ்பா உள்பட 4 பேரின் மீதான முன்ஜாமீன் வழக்கில் பிற்பகல் 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி