ஆப்நகரம்

சசிகலா புஷ்பா ஆதரவாளர் குண்டர் சட்டத்தில் கைது

ராஜசபா எம்பி சசிகலா புஷ்பா ஆதரவாளர் ஹரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 4 Nov 2016, 3:28 pm
ராஜசபா எம்பி சசிகலா புஷ்பா ஆதரவாளர் ஹரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil sasikala pushpa supporter arrested in gundas act
சசிகலா புஷ்பா ஆதரவாளர் குண்டர் சட்டத்தில் கைது


சசிகலா புஷ்பா எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திரு நெல்வேலி மாவட்டம் திசையன் விளை அருகே உள்ள ஆணை குடியைச் சேர்ந்த பணிப்பெண்கள் இருவர் பாலியல் புகார் அளித்த னர். இந்த வழக்கில் பணிப் பெண்களுக்கு ஆதரவாக திசையன் விளையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சுகந்தி ஜெய்சன் ஆஜராகி வந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு பெண் வழக்கறிஞரின் வீட்டை தாக்கிய சசிகலா புஷ்பா எம்பியின் ஆதரவாளரான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரியை போலீஸார் அக்டோபர் 16-ம் தேதி திருநெல்வேலியில் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்

இந்தநிலையில் சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஹரிநாடார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அவரை நெல்லை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி