நெல்லை: அதிமுக-வில் இருந்து நீக்கப்பட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஹரி நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற போது, தில்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவாவின் கன்னத்தில், அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா அறைந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, போயஸ் கார்டன் சென்று விளக்கம் அளித்தார் சசிகலா புஷ்பா.
அதன்பின்னர், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, அதிமுக பொதுச்செயலாளர் தன்னை அடித்தார் என்றும், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் பகிரங்க குற்றச்சாட்டை கண்ணீர் மல்க முன் வைத்தார்.
மாநிலங்களவையில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார். எனினும், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் வலியுறுத்துகிறது என்றும், ஆனாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் சாசிகலா தெரிவித்தார்.
இதனிடையே, சசிகலா புஷ்பா மீது வழக்குகள் பாயலாம் என்ப கருதப்பட்ட நிலையில், சசிகலாவின் வீட்டில் பணிபுரிந்து வந்த இரண்டு பெண்கள், , சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையில் சசிகலா புஷ்பா தரப்பினர் நேரில் முன்ஜாமீன் கோரினர். ஆனால், அவர்களது முன்ஜாமீன் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்தும், சசிகலா நடராஜன் தரப்பினர் குறித்தும் சசிகலா புஷ்பா தொடர்ந்து பேசி வருகிறார். அதேசமயம், தமிழகத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய சாசிகலா புஷ்பாவுக்கு, சிலர் பாதுகாப்ப்பு அளிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஹரி, நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளரான ஹரி, சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sasikala pushpa's suppporter Hari arrested in Nellai
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற போது, தில்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவாவின் கன்னத்தில், அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா அறைந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, போயஸ் கார்டன் சென்று விளக்கம் அளித்தார் சசிகலா புஷ்பா.
அதன்பின்னர், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, அதிமுக பொதுச்செயலாளர் தன்னை அடித்தார் என்றும், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் பகிரங்க குற்றச்சாட்டை கண்ணீர் மல்க முன் வைத்தார்.
மாநிலங்களவையில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார். எனினும், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் வலியுறுத்துகிறது என்றும், ஆனாலும் நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் சாசிகலா தெரிவித்தார்.
இதனிடையே, சசிகலா புஷ்பா மீது வழக்குகள் பாயலாம் என்ப கருதப்பட்ட நிலையில், சசிகலாவின் வீட்டில் பணிபுரிந்து வந்த இரண்டு பெண்கள், , சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இந்த வழக்கு விசாரணையில் சசிகலா புஷ்பா தரப்பினர் நேரில் முன்ஜாமீன் கோரினர். ஆனால், அவர்களது முன்ஜாமீன் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதனிடையே, முதல்வரின் உடல்நிலை குறித்தும், சசிகலா நடராஜன் தரப்பினர் குறித்தும் சசிகலா புஷ்பா தொடர்ந்து பேசி வருகிறார். அதேசமயம், தமிழகத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய சாசிகலா புஷ்பாவுக்கு, சிலர் பாதுகாப்ப்பு அளிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஹரி, நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். நாடார் மக்கள் சக்தி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளரான ஹரி, சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sasikala pushpa's suppporter Hari arrested in Nellai