ஆப்நகரம்

ஜெ.,வை காப்பாற்ற சசிகலாவின் உறவினர்கள் உதவி செய்தனர் : ஓ.எஸ்.மணியன்

மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலாவின் உறவினர்கள் பலரும் உதவினார்கள் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

TNN 16 Jan 2017, 4:11 pm
சென்னை : மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலாவின் உறவினர்கள் பலரும் உதவினார்கள் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sasikala relative help to jayalalitha in hospital o s maniyan
ஜெ.,வை காப்பாற்ற சசிகலாவின் உறவினர்கள் உதவி செய்தனர் : ஓ.எஸ்.மணியன்


இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறும்போது, "அதிமுக வளர வேண்டும் என்பவர்கள் அனைவரும் கருத்து சொல்லலாம். எம்.ஜி,ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் திவாகரன் முக்கிய பங்குவகித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பக்கப்பலமாக இருந்தவர் திவாகரனும் , அவரது குழுவினரும் தான். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் அதிமுக அணி இரண்டு பட்டபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திவாகரன் இருந்தார்.

மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலாவின் உறவினர்கள் பலரும் உதவினார்கள். மேலும் கே.பி. முனுசாமி கட்சி தாவ முடிவெடுத்து விட்டார் என்பது அவரது பேச்சின் மூலமாக தெளிவாகிறது. அவர் விலை போய்விட்டார், அவரை யாரோ பின்னிருந்து இயக்குகிறார்கள் என்று கூட சொல்லலாம்." என்று அவர் கூறினார்.

முன்னதாக, முதல்வருக்கு சிலர் இடையூறு அளிப்பதாகவும், அதிமுகவை கைப்பற்ற நடராஜன் மற்றும் திவாகரன் ஆகியோர் முயற்சிக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றசாட்டியிருந்தார்.

அடுத்த செய்தி