ஆப்நகரம்

சசிகலா விடுதலையும் ஜெ நினைவிட திறப்பும்: எடப்பாடி போட்ட ‘பலே’ திட்டம்!

சசிகலா விடுதலையும், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவும் ஒரே நாளில் அமைவதன் பின்னணி என்ன தெரியுமா?

Samayam Tamil 20 Jan 2021, 1:45 pm
சசிகலா விடுதலையாகும் அதே நாளில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சசிகலா ஜனவரி 27ஆம் தேதிதான் விடுதலையாவார் என சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட போதும் நினைவிட திறப்பு விழாவை ஏன் அதே நாளில் வைத்தனர் என்பது குறித்து விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
Samayam Tamil vk sasikala in jayalalithaa memorial


ஜெயலலிதா மறைந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில் அவரது நினைவிடத்தை 50,422 சதுர அடியில், 50.80 கோடி ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் மணி மண்டபமாக எழுப்பி வருகின்றனர். பிப்ரவரியில் இதை திறக்க திட்டமிடப்பட்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியை திறந்து வைக்க அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் பிரதமர் தரப்பில் இதை நிராகரித்ததாக கூறப்படுகிறது. சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டவரின் நினைவிடத்தை திறந்து வைத்தால் விமர்சனங்கள் எழும் என்பதால் அதை தவிர்த்ததாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சசிகலாவை பார்க்க துடிக்கும் இரு முன்னாள் அமைச்சர்கள்

இந்நிலையில் ஜனவரி 27ஆம் தேதி மணிமண்டபத்தை திறக்கலாம் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அண்மையில் அவர் அதன் பணிகளை மேற்பார்வையிட்டார்.

சசிகலா விடுதலையாகும் அதே நாளில் ஏன் அவர் தேர்ந்தெடுத்தார் என அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். “சசிகலா விடுதலையாகும் போது ஒட்டுமொத்த வீடியோவும் அவரது வருகையை செய்தியாக்கும். தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யும். வெளியே வருவதற்கு முன்னரே செய்திகள் அவர் குறித்து அணி வகுத்து நிற்கும் நிலையில் விடுதலையாகும் அன்று ஒட்டுமொத்த கவனமும் அவர் மேல் குவிவதை தடுக்கவே இந்த ஏற்பாடு.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா? தற்போதைய நிலவரம் இதுதான்!

மேலும் சசிகலாவை வரவேற்க அதிமுகவினர் யாரும் சென்றுவிடக்கூடாது என்பதால் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவை அன்றைய தினம் வைத்துள்ளனர்” என்று கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி