ஆப்நகரம்

எனக்கு சாதி முக்கியம் அல்ல.. என் வழி தனிவழி: சசிகலா ஓப்பன் டாக்!

தான் எல்லோருக்கும் பொதுவான நபர் என்றும் குறிப்பிட்ட ஊருக்கோ, சாதிக்கோ மட்டும் சொந்தம் என்று கூறமுடியாது என்று சசிகலா கூறியுள்ளார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 14 Apr 2023, 4:22 pm
அதிமுகவின் பொதுச் செயலாளர் நான் தான் என தொடர்ந்து உரிமை கோரிவரும் சசிகலா சென்னையில் இன்று (ஏப்ரல் 14) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Samayam Tamil sasikala eps devar jeyanthi


அப்போது பேசிய அவர், “நான் எல்லோருக்கும் பொதுவான நபர். எனக்கென்று இது சொந்த ஊர், அது சொந்த ஊர் என்று நான் நினைத்தது கிடையாது. அதுபோல சாதியிலும் அப்படி நான் நினைத்தது இல்லை. அப்படி நினைத்திருந்தால், ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வராக நான் கொண்டு வந்திருக்கமாட்டேன்.

என்னைப் பொருத்தவரை புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்றுதான் பார்க்கிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் அப்படித்தான் பார்த்தார். அவர், ஒரு ஏழைக்கும் எம்எல்ஏ வாய்ப்பு கொடுத்து, வெற்றி பெற வைத்து அமைச்சராகவும் மாற்றியிருக்கிறார். நாங்கள் அப்படி வளர்க்கப்பட்டவர்கள். எனவே, என்னுடைய வழி தனிவழியாகத்தான் இருக்கும். எல்லோருக்கும் என்னைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு காலம் நேரம் வரும். அந்த காலநேரம் வரும்போது எல்லோருமே புரிந்துகொள்வார்கள்.
தம்பி அண்ணாமலையை மாத்திறாதீங்க ப்ளீஸ்! பாஜக தலைமைக்கு ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்!எதிர்க்கட்சிகள் பேச வேண்டிய நேரத்தில் எதை பேச வேண்டுமோ, மக்களுக்கு எதை எடுத்துக் கூற வேண்டுமோ, அதை பேச தவறுகின்றன.

ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள ஓபிஎஸ் மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு கொடுத்தால், ஊடகங்களிடம் சொல்லாமலா சென்றுவிடப் போகிறேன். அழைப்பு வரட்டும். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
சேலத்தில் பொளந்து கட்டிய வெயில்: இனிமேல் தான் சம்பவமே இருக்கு!
சிவில் நீதிமன்றத்தின் முடிவு தெரியாமல், பிறப்பிக்கப்படும் எந்த உத்தரவும் நிரந்தரமல்ல என்று உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. இதுக்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்” என்று பேசினார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி