ஆப்நகரம்

சசிகலாவை தமிழக சி‌றைக்கு மாற்றுக: சு.சுவாமி மீண்டும் வலியுறுத்தல்

சொத்துகுவிப்பு வழக்கின் குற்றவாளியான சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

TNN 6 Mar 2017, 9:31 am
சென்னை :சொத்துகுவிப்பு வழக்கின் குற்றவாளியான சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil sasikala should chage tn jail subramania swamy
சசிகலாவை தமிழக சி‌றைக்கு மாற்றுக: சு.சுவாமி மீண்டும் வலியுறுத்தல்


இதுகுறித்து பாஜக எம்.பி சுப்ரமணிய சாமி சென்னையில் நேற்று கூறும் போது, " சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும். சசிகலா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் சாட்சியங்கள் திசை திருப்பப்படாது. சசிகலா கர்நாடக சிறையில் இருப்பதால் ஆண்டுக்கு ரூ.10 கோடி தமிழக அரசு கொடுக்க வேண்டியது உள்ளது.எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி சிறபாக செயல்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்ததே திமுக ஆட்சி தான் " என்று அவர் கூறினார்.

சுப்பரமணிய சாமி தான் ஜெயலலிதா , சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்தவர். சசிகலா சிறையில் அடைக்கப்பட்டவுடன் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சுப்பரமணிய சாமி முன்னரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
sasikala should chage TN Jail : subramania swamy

அடுத்த செய்தி