ஆப்நகரம்

சிறையில் புளியோதரை சாப்பிட்ட சசிகலா...

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா இன்று புளிச்சாதம் சாப்பிட்டுள்ளார்.

TNN 16 Feb 2017, 11:58 pm
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா இன்று புளிச்சாதம் சாப்பிட்டுள்ளார்.
Samayam Tamil sasikala takes breakfast in parappana agrahara jail
சிறையில் புளியோதரை சாப்பிட்ட சசிகலா...


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து புதன் கிழமை மாலை பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா நேற்று பிற்பகல் புளிச்சோறு சாப்பிட்டுள்ளார்.

காலை 5.30 மணிக்கு எழுந்த சசிகலா சில நிமிடங்கள் தியானம் செய்துள்ளார். அதன் பிறகு பிஸ்கட், இனிப்பு அல்லாத டீ வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புளிச்சாதமும், 11 மணிக்கு சாண்ட்விச், மாலை 4 மணிக்கு பிஸ்கட் மற்றும் டீ போன்றவை வழங்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா இன்று சோர்வாகவே காணப்பட்டுள்ளார் என்று சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Sasikala takes breakfast in parappana agrahara jail

அடுத்த செய்தி