ஆப்நகரம்

மருத்துவமனையில் இருக்கும் சசிகலா சொன்ன வார்த்தை இதுதான்!

சசிகலா விரைவில் மக்களை சந்திக்க உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 28 Jan 2021, 7:59 pm
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். வரிடம் விடுதலை தொடர்பான ஆவணங்களில் கையொப்பம் வாங்கிய சிறை அதிகாரிகள் அவரை அதிகாரபூர்வமாக விடுதலை செய்தனர்.
Samayam Tamil சசிகலா
சசிகலா


முன்னதாக, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை காரணமாக சில நாட்கள் அவர் தொடர்ந்து பெங்களூருவில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சசிகலாவில் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உடல்நிலை முற்றிலும் குணமடைந்த பின்னரே பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் வருவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சசிகலாவின் வருகையை அமமுகவினர் எதிர்நோக்கி உள்ளனர். சசிகலாவின் அபிமானிகள் அதிமுகவில் ஏராளாம் என்பதால் அமமுகவினர் மட்டுமல்லாமல் சில அதிமுகவினர் கூட அவரது வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிகிறது. அதற்கு ஏற்றாற்போல், சசிகலாவுக்கு ஆதரவான குரல்கள் அதிமுகவில் ஒலிக்க தொடங்கியுள்ளன.

சசிகலா வருகைக்கு பின்னர் அதிமுகவை அவர் உரிமை கோருவாரா. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா அல்லது அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுப்பாரா என்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் விடை காண சசிகலாவின் தமிழக வருகை உற்று நோக்கப்பட்டு வருகிறது.

விடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..! செக் வைக்கும் அமலாக்கத்துறை

இந்த நிலையில், மருத்துவமனையில் இருக்கும் சசிகலா தெரிவித்ததாக தகவல் ஒன்றை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதன்படி, விரைவில் மக்களை சந்திப்பேன் என்று சசிகலா சொன்னதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில் சசிகலாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியது. தற்போது முடக்கப்பட்ட சசிகலாவின் சொத்துக்கள் குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறை அவருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி