ஆப்நகரம்

அதிமுகவில் சசிகலாவா? டிடிவி தினகரன் சொல்வது என்ன?

அதிமுகவில் சசிகலா இணையமாட்டார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 24 Oct 2019, 1:14 pm
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் விடுதலையாவார் என்றும் அவர் அதிமுகவில் மீண்டும் இணைவார் என்றும் சமீபகாலமாக அதிகளவிலான பேச்சுகள் உலா வருகின்றன.
Samayam Tamil Untitled collage (6)


நன்னடைத்தை விதிமுறைகள் என்பது கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மட்டும்தான் என்றும் சசிகலா இந்த விதி அடிப்படையில் முன்கூட்டியே விடுதலையடைய வாய்ப்பில்லை என்று கர்நாடக சிறைத்துறை இயக்குநர் என்.எஸ்.மெகரிக் தெரிவித்தார்.

சசிகலாவிற்கு எப்போது விடுதலை? வழக்கறிஞரின் அடுத்த திட்டம் இதுதான்!

விடுதலைக்குப் பின் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவார் என்று வலம் வரும் தகவல்களுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகின்றன. இந்நிலையில் இந்தத் தகவலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளார் டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “சசிகலா சிறையிலிருந்து வெளியேவந்ததும் ஒருபோதும் அதிமுகவில் இணையமாட்டார்” எனத் தெரிவித்தார்.

சசிகலா விடுதலையில் சிக்கல்: கைவிரித்த சிறைத்துறை இயக்குநர்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற இடைத்தேர்தலை அமமுக புறக்கணித்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக கூறியுள்ளார். “உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. ஒருவேளை நடைபெற்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயம் போட்டியிடும்” என தினகரன் தெரிவித்தார்.

மேலும், அதிமுக ஆட்சியில் ஒரு நல்ல திட்டங்களும் செயல்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் ஏரிகளை தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை. தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் ஆற்றோடு கடலில் கலந்துவிட்டன என்று தினகரன் பேசியுள்ளார்.

அடுத்த செய்தி