ஆப்நகரம்

அதிமுக எனும் எஃகு கோட்டை; போற்றி காக்க தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்...!

அதிமுக எனும் எஃகு கோட்டையை, போற்றி காக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார்.

TNN 13 Aug 2017, 9:36 am
பெங்களூரு: அதிமுக எனும் எஃகு கோட்டையை, போற்றி காக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா சிறையில் இருந்து கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil sasikala writes letter to his admk members
அதிமுக எனும் எஃகு கோட்டை; போற்றி காக்க தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்...!


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை ஆளும் அதிமுகவிற்குள் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஈபிஎஸ் என மூன்று குழுக்களாக பிரிந்து, ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்கின்றனர். அணிகள் இணைப்பு சாத்தியமா? சாத்தியமில்லையா? என்று நாளுக்கு நாள் தொடர் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

எக்கு கோட்டையில் விரிசல் விடாதா? தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர். இந்தியாவில் 3வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது.

முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம். ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் '' என குறிப்பிட்டுள்ளார்.

Sasikala writes letter to his admk members.

அடுத்த செய்தி