ஆப்நகரம்

சசிகலாவின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் – தினகரன்

சசிகலாவின் உடல் நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 5 Sep 2018, 2:27 am
சசிகலாவின் உடல் நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil TTV 123


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் செவ்வாய்க் கிழமை நேரில் சந்தித்தாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், மேகத்தாது அணை திட்டத்தை கா்நாடகா அரசு செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்க எதிா்ப்புத் தொிவித்து நீதிமன்றத்திற்கு சென்றது தற்போதைய கா்நாடகா முதல்வா் குமாரசாமி தான். எனவே தற்போது காவிாி விவகாரத்தல் அவா் கூறும் எந்த வாா்த்தையையும் நம்பக் கூடாது. தற்போது காவிாி விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிா்த்து 15 ஆண்டுகள் யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது.

இந்த நிலையில் தற்போது மேகத்தாது பகுதியில் அணை கட்டினால் மீண்டும் பிரச்சினை உருவாகும். அதன்பிறகு கா்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீா் திறந்து விட அனுமதிக்காது. சசிகலாவின் உடல்நிலை குறித்து தொடா்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சசிகலாவின் உடல்நலன் சீராக உள்ளது என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி