ஆப்நகரம்

ஐசியு-வில் நடராஜன்,சசிகாலா பரோலில் வருவாரா..?

சசிகலாவின் கணவர் நடராஜன், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால்,பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அவரது மனைவியான சசிகலா, பரோலில் வருவாரா என்றக் கேள்வி எழும்பியுள்ளது.

TNN 12 Sep 2017, 12:00 pm
சசிகலாவின் கணவர் நடராஜன், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால்,பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அவரது மனைவியான சசிகலா, பரோலில் வருவாரா என்றக் கேள்வி எழும்பியுள்ளது
Samayam Tamil sasikalas husband natarajan admitted to hospital
ஐசியு-வில் நடராஜன்,சசிகாலா பரோலில் வருவாரா..?


ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக அணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, சொத்து குவிப்பு வழக்கின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இவரது கணவரான நடராஜன் அதிமுகவில் நடக்கும் சூழ்ச்சிகள் குறித்து அடிக்கடி விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவின்மை காரணமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையிலுள்ள குளோபஸ் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடலிலுள்ள உறுப்புகள் செயலிழந்து இக்கட்டான நிலையை எட்டியுள்ளதாக மருத்துவர்கள தெரிவித்துள்ளனர். அவருடைய கல்லீரல் முழுவதுமாக செயலழிந்து விட்டதால், நுரையீரலும், கிட்னியும் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடராஜனின் உடல்நிலை, இக்கட்டான கட்டத்தில் உள்ளதால், சிறையில் இருக்கும் சசிகலா, பரோலில் வெளியே வர அதிகவாய்ப்புகள் உள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம், தன் அண்ணன் மகன் மகாதேவன் மரணத்திற்கும், தன் அண்ணி சந்தானலட்சுமி மறைவிற்கும் பரோல் வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு பரோல் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தன் கணவர் நடராஜானின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் சசிகலா பரோலில் வர அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Sasikala’s husband natarajan admitted to hospital.

அடுத்த செய்தி