ஆப்நகரம்

சசிகலா தரப்பில் அவசர ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரது உடல்நிலை கவலைகிடமாக உள்ள நிலையில், சசிகலா தரப்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 5 Dec 2016, 11:25 am
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவரது உடல்நிலை கவலைகிடமாக உள்ள நிலையில், சசிகலா தரப்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sasikalas relations likely to hold up emergency meeting regarding next political steps
சசிகலா தரப்பில் அவசர ஆலோசனை கூட்டம்


கடந்த செப்.22 நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நுரையீரல் தோற்று காரணமாக தொடர்ந்து 72 நாட்களாக மருத்துவனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த முதல் ஜெயலலிதாவுக்கு நேற்று (டிச.4) மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். விரைவில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளனர்.

இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் திவாகரன் உட்பட சசிகலாவின் குடும்பத்தினர் கூடி, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அப்பல்லோவுக்கு உடனடியாக வர வேண்டும் என தலைமை கழத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும், விரைவில் அதிமுக அமைச்சர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

CM Jayalalithaa's close friend Sasikala and her relatives likely to hold up emergency meeting regarding next Political steps.

அடுத்த செய்தி