ஆப்நகரம்

சசிகுமார் கொலை வழக்கு : தகவல் தருவோர்க்கு ரூ.2லட்சம் சன்மானம்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் அறிவித்துள்ளனர்.

TNN 11 Apr 2017, 4:47 pm
கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் அறிவித்துள்ளனர்.
Samayam Tamil sasikumar murder case cbcid police announced cash reward upto 2 lakh
சசிகுமார் கொலை வழக்கு : தகவல் தருவோர்க்கு ரூ.2லட்சம் சன்மானம்



கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று, இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் படுகொலை செய்ப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக துடியலூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் முன்னேற்றம் இல்லாததால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை வழக்கு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்திற்குரிய நபர்களின் படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். ஆனால் இதுவரை கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்தநிலையில் சசிகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் அறிவித்துள்ளனர்.

#CBCID police today announced cash reward upto ₹2 lakh for information leading to arrest Sadham, Mubarak wanted in #Sasikumar murder case

அடுத்த செய்தி