ஆப்நகரம்

சாத்தான்குளம் விவகாரம், மேலும் 5 போலீஸ் கைது!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்...

Samayam Tamil 8 Jul 2020, 12:58 pm
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடந்தபோது சாத்தாகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்த பால்துரை உள்பட 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil சாத்தான்குளம் விவகாரம், மேலும் 5 போலீஸ் கைது!
சாத்தான்குளம் விவகாரம், மேலும் 5 போலீஸ் கைது!


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை ஜெயராஜ்-மகன் பென்னிக்ஸ் ஊரடங்கை விதியை மீறினர் என போலீசார் கைது செய்து கடுமையாகத் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக அவர்கள் உயிரிழந்த விவகாரம் வெளியே வந்ததையடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் எழுந்தது.

நாடே திரும்பிப் பார்த்த இந்த விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார் இதுவரை சாத்தான்குளம் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, சம்பவத்தின்போது பணியிலிருந்த காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ், வெயிலுமுத்து உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த 5 பேரிடம் முன்பே சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்தபோது பணியிலிருந்ததை சுட்டிக்காட்டி இப்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி