ஆப்நகரம்

சாத்தான்குளம் வழக்கு: காவலர்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் 5 போலீசாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அளித்துள்ளது

Samayam Tamil 14 Jul 2020, 4:07 pm
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ள சிபிஐ, இவர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி கோரியது. வழக்கு விசாரணையின் போது சிபிஐ விசாரணைக்குச் செல்ல காவலர்கள் 5 பேரும் மறுப்புத் தெரிவித்தனர். நீதிபதி ஹேமானந்த் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் கேட்டுள்ளார். அப்போதும் ஐவரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் விவகார நீட்சி: காவலர்களுக்கு யோகா பயிற்சி

இந்தக் கொலை விவகாரத்தில் உண்மை தெரிய வேண்டுமென்றால் அதற்கு 5 காவலர்களிடமும் விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, காவலர்கள் 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி