ஆப்நகரம்

தமிழ்நாட்டில் 7 ஆயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவை - தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

கடலூர்: தேர்தலை குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Samayam Tamil 20 Feb 2021, 9:12 pm
தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்ட சபை தேர்தலின் வாக்குப்பதிவை ஒரே கட்டமாக நடத்த அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைகளை வைத்து வருகின்றன. தொடர்ந்து தமிழக தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
Samayam Tamil file pic


அண்மையில் தமிழகத்தில் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதாற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்துக்கு வருகை தந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிர தா சாகு உடன் ஆலோசனை நடத்தினர்.

அதில் ஓர் அங்கமாக தபால் ஓட்டு குறித்து எடுக்கப்பட்ட முடிவை இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதாவது, 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம், கழிவறை, மருத்துவ வசதி செய்து தரப்படும்.

தமிழ்நாடு காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வு தேதி அறிவிப்பு..!

விருப்பப்படும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியைப் பயன்படுத்தலாம் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறினார். இந்நிலையில், எதிர்வரும் சட்ட சபை தேர்தலையொட்டி கடலூரில் அதிகாரிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், தமிழகத்திற்கு 21 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்கு சாவடிகள் பதற்றமானவை என்றும் பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் கூறினார்.

அடுத்த செய்தி