ஆப்நகரம்

கன்னடர்களுக்கு எதிராக சத்யராஜ் பேசவில்லை: அன்புமணி

காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுக்கு எதிராக சத்யராஜ் பேசவில்லை என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

TNN 22 Apr 2017, 4:10 am
சென்னை: காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுக்கு எதிராக சத்யராஜ் பேசவில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sathyaraj did not speak against kannadigas anbumani ramadoss
கன்னடர்களுக்கு எதிராக சத்யராஜ் பேசவில்லை: அன்புமணி


காவிரிப்பிரச்சனைக்குக் குரல் கொடுத்த நடிகர் சத்யராஜ்-க்கு எதிராக கன்னட அமைப்புக்கள் பாகுபலி 2 படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது கண்டனத்திற்குரியது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரிப் பிரச்சனையில் சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசவில்லை எனவும், தமிழ்திரையுலகில் பணியாற்றும் கன்னட நடிகர்கள் சிலரும் ஆவேசமாக பேசிய நிலையில், அவர்களை தமிழர்கள் எதிர்த்தால் நிலைமை என்னவாகும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், தம் பேச்சுக்கு வருத்தம்தெரிவித்ததோடு, தமிழகம் சார்ந்த நியாயமான பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கப் போவதாகவும் சத்யராஜ் துணிச்சலோடு அறிவித்ததற்கு அன்புமணி பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனேவே கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் தமிழர்கள், தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அன்புமணி ராமதாஸ், இம்முறை அதே போல் அம்மாநில அரசு போராட்டத்தை வளரவிட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.
Sathyaraj did not spek against Kannadigas: Anbumani Ramadoss

அடுத்த செய்தி