ஆப்நகரம்

வரும் தேர்தலில் ராஜேந்திர பாலாஜி தோற்பார் - அதிமுக எம்எல்ஏ கூறியதால் பரபரப்பு

வரும் தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் தோல்வி அடைவார் என சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் பேசியது பரபரப்பாகியுள்ளது.

Samayam Tamil 21 Dec 2020, 6:06 pm
தமிழகத்தில் எதிர்வரும் சட்ட சபை தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக இரண்டு மாபெரும் திராவிட கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக தமது தேர்தல் கூட்டணிகளை அமைக்கும் பணிகள் இன்னமும் முடிவுறா நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இதனால், தேர்தல் மார்ச் மாதத்திற்குள் நடைபெறலாம் எனவும் யூகிக்கப்படுகிறது.
Samayam Tamil rajendra balaji


அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான அதிகார விரிசல்கள் அவ்வப்போது தலை தூக்கி வந்தாலும் அதனை உடனடியாக கட்சியின் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சரி செய்து விடுகின்றனர். இந்நிலையில், சாத்தூர் எம்எல்ஏ வுக்கும், அமைச்சருக்கும் ஏற்பட்டுள்ள தகராறு பூதாகரமாக வெடித்துள்ளது. சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது பேசியவர், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்பது உறுதி என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், விருதுநகரில் நான்கு தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே காரணம் எனவும் கூறினார். எம்எல்ஏ ராஜவர்மனுக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் ஏற்கனவே முன் தகராறு உள்ளது.

அதென்ன 7 செயல் திட்டங்கள்? மக்கள் நீதி மய்யம் கட்சியின் செம மாஸ் அறிவிப்பு!

கடந்த செப்டம்பர் மாதம் இதேபோன்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் பேசிய ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னை கூலிப்படை வைத்து மிரட்டினார் என்று குற்றம் சாட்டினார். மேலும், அந்த ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த பரபரப்பான சூழலில், கட்சி தலைமை குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியது.

இந்நிலையில், ராஜவர்மன் மீண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தேர்தலை வைத்து விமர்சித்திருப்பது அதிமுகவில் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி