ஆப்நகரம்

என்னவொரு பிளானிங் - மழை நீரை சேமிக்க விஜயகாந்த் சொல்லும் அட்வைஸ் கேளுங்க!

மழை நீரை சேமிக்க வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறும் கோரிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 28 Jul 2019, 7:49 pm
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தமிழகம் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வந்தது. வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இந்த சூழலில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.
Samayam Tamil Vijayakanth


தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஸ்டாலின் ராசியால் தான் கர்நாடக அரசு கவிழ்ந்தது- பிரச்சாரத்தில் போட்டு தாக்கிய பழனிசாமி!

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மழைக்காலம் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு உடனடியாக நீர் நிலைகளை அதிக கவனம் செலுத்தி மழை நீரை சேமிக்க அக்கறை காட்ட வேண்டும்.

நாங்க நினைச்சா போதும்; அரசியலில் இருந்து ஸ்டாலின் அவுட் - ராஜேந்திர பாலாஜி கெத்து பிரச்சாரம்!

அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி தடுப்பணைகளை சீர்படுத்தி மழைநீரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கிற நிலையை வருங்காலங்களில் உருவாக்க வேண்டும்.

வெவ்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் 200க்கும் மேற்பட்டோர் இணைப்பு

மதுராந்தகம் ஏரியை தூர் வாரி, அந்தப் பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சனையை போக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அடுத்த செய்தி