ஆப்நகரம்

Sterlite: ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை:தொடர்ந்து சிபிஐ விசாரிக்கவும் உத்தரவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2019, 2:54 pm
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Samayam Tamil lite


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய பேரணியில் காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 13 போ் கொல்லப்பட்டனா். இதனைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஆலை தரப்பில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் முறையிடப்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஆலையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. நீதிபதி தருண் அகா்வாலா தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், ஆலையை மீண்டும் திறந்துகொள்ளலாம் என்று தீா்ப்பு வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு அலைக்கு தேவையான மின் சேவையை 3 வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று கெடுவும் விதித்தது.

இதன் பின்னா் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதே போன்று ஸ்டொ்லைட் ஆலை தரப்பிலும், ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் மீது இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டன. பல்வேறு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை இன்று வரை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதோடு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி