ஆப்நகரம்

காவிரி வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

TNN 26 Aug 2016, 3:48 pm
புதுதில்லி: காவிரியில் தண்ணீர் திறந்து விடும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
Samayam Tamil sc accepts to probe cauvery case as a emergency case
காவிரி வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்


முன்னதாக, காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி, தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறக்காததால், உச்ச நீதிமன்றத்தில் விரைவில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும் என்றும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி நமக்கு உரிய பங்கைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும், விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சில தினங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான 50.02 டிஎம்சி தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடாகா மாநிலத்துக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு முன்பு, தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி ஆஜராகி வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இதே அமர்வு முன்பு வரும் 2-ம் தேதி விசாரணை நடைபெறும் என அறிவித்தார்.

முன்னதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேற்று சந்தித்த தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். ஆனால், கர்நாடக மாநிலத்தில் போதுமான மழை பெய்யவில்லை என்றும், அங்குள்ள அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை என்றும் சித்தராமையா அவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி