ஆப்நகரம்

தமிழக உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Samayam Tamil 26 Oct 2018, 1:04 pm
தமிழ்நாட்டிற்கு கடந்த 2017 நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.
Samayam Tamil SC


இதனால் தமிழ்நாடு அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுக தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, வார்டு மறுவரையறை பணிகளை முடித்து தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தலை நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்த சூழலில் தமிழ்நாட்டில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையம் 4 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஒத்திவைத்தது.

SC issues notice to Election Commission for Tamilnadu Localbody Election.

அடுத்த செய்தி