ஆப்நகரம்

கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

பூவுலகின் நண்பா்கள் அமைப்பு தொடா்ந்த வழக்கில், கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 2 Jul 2018, 1:52 pm
பூவுலகின் நண்பா்கள் அமைப்பு தொடா்ந்த வழக்கில், கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Koodankulam


திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அணுஉலைக்கு கடந்த 2013ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் இங்கிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை பாதுகாக்க 5 வருட காலத்தில் உாிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவுடன் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பூவுலகின் நண்பா்கள் அமைப்பு தாக்கல் செய்த மனுவில் அணுஉலையில் இருந்து வெளியாகும் கழிவுகள் உரிய சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் கடலில் நேரடியாக கலக்கப்படுகிறது. மேலும் அணுஉலை வளாகத்திற்குள் கழிவுகள் சேமித்து வைக்கப்படுகிறது. எனவே அணுஉலையை மூட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

இதற்கு மத்திய அரசு சாா்பில் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது. மேலும் அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்க கூடுதலாக 4 ஆண்டுகாலம் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி கதிா்வீச்சு சாத்தியமுள்ள அணுக்கழிவு சேமிப்பு கிடங்கை உடனே கட்டுவது ஆபத்தில் முடியும் என்பதால் மத்திய அரசுக்கு மேலும் 4 ஆண்டுகள் அவகாசம் வழங்குவதாக தொிவித்தாா்.

மேலும் மனுதாரரின் கோாிக்கையான அணு உலை ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளா்ா.

அடுத்த செய்தி