ஆப்நகரம்

காவிரி நதி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தமிழகம் மற்றும் கர்நாடகம் உள்ளடக்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

TNN 7 Feb 2017, 11:26 am
தமிழகம் மற்றும் கர்நாடகம் உள்ளடக்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
Samayam Tamil sc to hear cauvery issue involving tn karnataka
காவிரி நதி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை


தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தினமும் வினாடிக்கு 2000 கன அடி நீர் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், தங்களது குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே நீர் இருக்கிறது என்றும், தமிழகத்தின் விவசாயத்திற்கு நீர் வழங்க முடியாது என்றும் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்து இருந்தது. தமிழகத்திற்கும் இதுவரை நீர் வழங்கவில்லை.

இந்நிலையில் காவிரி விவகாரத்தின்போது இரண்டு மாநிலங்களிலும் ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடகம் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே கோரிக்கையை முன் வைத்து, தமிழகத்தின் தன்னார்வலர் சிவகுமாரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு கர்நாடகா நீர் வழங்கவில்லை. எனவே, இதை ஈடு செய்யும் வகையில் தமிழகத்திற்கு கர்நாடகா இழப்பீடாக ரூ. 2,480 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடுத்து இருந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி