ஆப்நகரம்

விவசாயிகள் வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

தில்லியில் போராடி வரும் விசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்தவுள்ளது.

TNN 12 Apr 2017, 7:32 pm
புதுதில்லி: தில்லியில் போராடி வரும் விசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்தவுள்ளது.
Samayam Tamil sc to hear farmers case on tomorrow
விவசாயிகள் வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை


தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், தில்லியின் ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு, பல்வேறு மாநில விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உணவு, தங்குமிடம் என பல்வேறு இன்னல்களை கடந்து, கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, விசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா அமர்வு முன்பு நாளை நடைபெறவுள்ளது.
SC to hear Farmers case on tomorrow

அடுத்த செய்தி