ஆப்நகரம்

கனமழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

TNN 31 Oct 2017, 8:37 am
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil school and collages were given holiday due to heavy rain
கனமழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனால் நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது,

இதனையடுத்து சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய மூன்று தாலுக்காக்களைத் தவிர மற்ற பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

School and Collages were given holiday due to heavy rain.

அடுத்த செய்தி