ஆப்நகரம்

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்: பள்ளிக் கல்வித்துறை எடுத்த முடிவு!

தமிழ்நாட்டில் கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தாமதமானதால் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 16 Jun 2023, 5:29 pm
தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து ஏப்ரல் இறுதியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டன. மீண்டும் பள்ளி ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயில் கொடுமை குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் இருந்தன. இதைத் தொடர்ந்து ஜூன் 7ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
Samayam Tamil anbil magesh with students


இருந்த போதும் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதியும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த கல்வி ஆண்டை தொடங்குவதற்கு தாமதமாகியுள்ளதால் அதனால் பாடங்களை குறிப்பிட்ட நாள்களில் முடிக்க முடியாமல் போகலாம். அல்லது குறைவான நாள்களில் அதிக பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் தள்ளப்படுவார்கள்.

ஸ்டாலின் கொடுத்த ஆஃபர்: நோ சென்ன இறையன்பு - கோட்டையில் நிகழும் பெரிய மாற்றம்!

நாளை மறுநாள் (ஜூன் 12) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படக்கூடாது என்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு நான்கு மணிநேரம் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
உதயநிதி, அன்பில் மகேஷுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்: இனிமே இப்படி நடக்க கூடாது!
இதன் காரணமாக பற்றாக்குறையை போக்குவதற்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதவாறு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும். படிப்பு மட்டுமல்லாமல் சிலம்பம் போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தப்படும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி