ஆப்நகரம்

மாணவர்களுக்கு முழு பாடங்கள்: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

Samayam Tamil 14 Jun 2022, 11:23 am
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்கு பின்னர், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்று பாடங்களை கற்று வருகின்றனர். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil முழு பாடங்களை நடத்த உத்தரவு
முழு பாடங்களை நடத்த உத்தரவு


இந்த நிலையில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து முழு பாடங்களாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டன. இதனிடையே, கொரோனா தொற்று அதிகரித்ததால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. இதையடுத்து, பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன.
கொரோனா: மாநிலங்களை அலர்ட் செய்த மத்திய அரசு!
கொரோனா பரவல் காரணமாக சரியாக வகுப்புகளை நடத்த முடியாததால், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீதமும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 39 சதவீதமும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு பாடங்களையும் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி