ஆப்நகரம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சிஇஓ-க்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 May 2020, 7:57 pm
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (சிஇஓ) பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil school education


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், பொதுத் தேர்வை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ள, அவர்களின் ஐயங்களை போக்க வேண்டியது அவசியமாகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மறுபரிசீலனை செய்ய ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!

எனவே மாணவர்கள் தங்களை தொடர்புகொள்ள வசதியாக, ஒரு நேர்முக உதவியாளர், நான்கு முதுநிலை ஆசிரியர்கள் ஆகியோரிடன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் (சிஇஓ) தங்களின் அலுவலகத்தில் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த பணியை மேற்கொள்ளவுள்ள ஆசிரியர்களின் பெயர், பதவி, மொபைல்ஃபோன் ஆகிய விவரங்கள் அடங்கிய பட்டியலை, நாளை காலை 11 மணிக்குள், dsetamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வராத தற்போதைய சூழலில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி