ஆப்நகரம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை!

சென்னை: ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Samayam Tamil 27 Jan 2019, 5:43 pm
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Teachers Protest


இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும். காலிப் பணியிடங்களில் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

நாளைக்குள் பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இருக்காது. ஜனவரி 28க்கு பிறகு தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அவகாசம் முடிந்து வரும் ஆசிரியர்களுக்கு, ஏதேனும் ஒரு காலிப் பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உட்பட்டு பணியேற்க ஆணை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி