ஆப்நகரம்

விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரது உறவினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 27 Mar 2019, 6:43 pm
கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அவரது உறவினர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Samayam Tamil 1551089344-ThinkstockPhotos-462147693_2


நுவரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் சின்னசேலத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று கணிதத் தேர்வு எழுதிவிட்டு வழக்கம்போல் விடுதிக்குச் சென்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் காவல் துறையினர் மாணவியின் உடல் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் 150க்கும் மேற்பட்டோர் சின்ன சேலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள், பள்ளியில் நுழைந்து அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து சின்ன சேலம் காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி