ஆப்நகரம்

கனமழை: ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் இன்று ஏழு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Dec 2019, 8:21 am
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாடு புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது.
Samayam Tamil ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை


இந்நிலையில் நீலகிரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதலே கனமழை பெய்துவருகிறது.

இந்த வடகிழக்கு பருவமழை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குத் தான் மற்ற மாவட்டங்களை அதிக அளவில் மழைப் பொழிவை கொடுத்துள்ளது. இதனால் இந்த நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பிக் காணப்படுகின்றன. இந்நிலையில் இராமநாதபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
நாளைக்கும் மிக கனமழை: எந்தெந்தப் பகுதிகளுக்கு தெரியுமா?
இதே போல் சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொட்டித் தீர்த்த பெரு மழை- தென் தமிழகத்தில் நிரம்பி வழியும் நீர்நிலைகள்!
கடலூர் மாவட்டத்தில் வடலூர், சிதம்பரம், கடலூர் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி