ஆப்நகரம்

தமிழகத்தில் கனமழை: இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

கனமழை முன்னெச்சரிக்கையாக நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Dec 2019, 6:06 pm
தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் கனமழை: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!


தமிழகத்தில் பருவமழை விடாமல் பெய்து வருகிறது. இன்றும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரெட் அலெர்ட்..! 10 மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச் வைத்துள்ள பேய் மழை...

அதே சமயம் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீடிக்கும் கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் அறந்தாங்கி... சென்னையின் நிலைமை என்ன.?

இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ளார். அதையடுத்து கடலூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் அன்பு செல்வன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக நாளை அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி