ஆப்நகரம்

பள்ளி செல்லும் வயதில் வயிற்றில் பிள்ளை; திருச்சி மாணவி எடுத்த விபரீத முடிவு!

11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கர்ப்பம் அடைந்ததால் செய்வதறியாது தவித்து வந்தார். இந்த சூழலில் அவர் எடுத்த விபரீத முடிவு அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2019, 10:33 am
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி, அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். எல்லாம் சுமூகமாய் போய் கொண்டிருந்த அவரது வாழ்வில், எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil Girl Murder


யாரோ ஒரு கயவனால் கர்ப்பம் அடைந்தார். இதனை தனது பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

3 ஆண்டுகள் கடந்தும் ஜெயலலிதா மரணத்தில் நீங்காத மர்மம்!

இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சோதித்து பார்த்து விட்டு மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த செய்தி அவரது குடும்பத்தாரின் தலையில் இடியாய் இறங்கியது. இப்படியொரு தவறு நடந்திருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் மாணவியை உயிர் பிழைக்க வைக்க வேண்டுமெனில் வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சீமானுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு!

அதற்கு அந்த மாணவியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் வெற்றிகரமாக சிசு அகற்றப்பட்டது. ஆனால் மாணவியை காப்பாற்ற முடியவில்லை.

மருத்துவர்கள் முயற்சி தோல்வியை தழுவ மாணவி உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் அவரின் குடும்பத்தை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

ஜெ. 3ஆம் ஆண்டு நினைவு தினம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமாக நபரை போலீசார் தேடி கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி